வரி ஏய்ப்பு வழக்கில் ரூ.54 கோடி அபராதம், வரியாக செலுத்திய பியூஷ் ஜெயின்.!

0 3329

கான்பூர் வாசனை திரவிய தொழிலதிபர் பியூஷ் ஜெயின், 187 கோடி ரூபாய் வருமான வரியாக செலுத்த வேண்டுமென வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து, கணக்கில் வராத 197 கோடி ரூபாய் ரொக்கம், 23 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்டவைக்கு 87 % வருமான வரியாக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், பாக்கியை செலுத்த ஒப்புக்கொண்ட ஜெயின், இதுவரை 54  கோடி ரூபாய் வரி மற்றும் அபராதம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments