பென்ஷனுக்காக அலைக்கழிக்கப்பட்ட 75 வயது பெண்மணி.. 7 கி.மீ நடந்து, 3 மணி நேரம் காத்திருந்ததால் மயங்கி விழுந்த பரிதாபம்..!

0 3395

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள நிட்டூர் என்ற கிராமத்தில் முதியோர் பென்ஷனுக்காக அலைகழிக்கப்பட்ட 75 வயது பெண்மணி ஒருவர் கிராம அலுவலகத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தனது கிராமத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை அந்த பெண்மணி நடந்தே வந்ததாகவும், கிராம அலுவலகத்தில் கணக்காளர் இல்லாததால் மேலும் 3 மணி நேரம் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சோர்வடைந்திருந்த அவர் தொடர்ந்து காத்திருந்ததால் அங்கேயே மயங்கி விழுந்தார்.

அருகிலிருந்த மக்கள் அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். சரியான நேரத்தில் பணிக்கு வராத அந்த கணக்காளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments