சீனாவின் பெய்டெய்ஹே நகரத்திற்குள் டெஸ்லா கார்கள் நுழைய தடை.. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என செய்தி வெளியீடு!

0 2422

சீனாவின் கடற்கரை நகரமான பெய்டெய்ஹேவிற்குள் ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை டெஸ்லா கார்கள் நுழைய தடைசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பிரிட்டனில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹெபே மாகாணத்தில் ஜூலை இறுதியில் தொடங்கும் கோடைக்கால உச்சி மாநாட்டில் டெஸ்லா கார்களில் பொருத்தப்பட்டுள்ள 8 கேமராக்கள், மில்லிமீட்டர் அலை ரேடார் மற்றும் 12 அல்ட்ராசோனிக் சென்சார்கள் மூலம் உளவு பார்க்கப்படலாம் என்பதால் தடை விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments