உள்நோக்கத்துடன் ஓபிஎஸ் செயல்படுகிறார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
கடிதம் எழுதி கட்சியின் ரகசியத்தை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளதாகவும், அவர் உள்நோக்கத்துடன் அந்த கடிதத்தை எழுதியுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், செல்போன் மூலம் பேசுவதை விட்டுவிட்டு வழக்கத்திற்கு மாறாக பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கட்சியில் இருந்து நீக்கியவர்களை பன்னீர் செல்வம் சந்தித்தாகவும் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Comments