டீக்கடைக்கு சென்று கடைக்காரரை மிரட்டி சிகெரெட் வாங்கிய இளைஞர்கள்…. சிசிடிவி காட்சி

0 3714

திண்டுக்கல்லில் மதுபோதையில் பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள், கத்தியால் வெட்டியதில் 2 பேர் காயமடைந்தனர்.

அதிகாலையில் கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்ற இளைஞர்கள், டீக்கடைக்காரரை மிரட்டி சிகிரெட் வாங்கியுள்ளனர்.

பின்னர் டீக்கடையில் பணிபுரிபவரை தாக்கி பணம் பறித்த இளைஞர்கள், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ கண்ணாடியை அடித்து நொறுக்கியதோடு செய்தித்தாள் விநியோகம் செய்த நபரையும் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த போலீசார், வேல்முருகன் என்பவனை விரட்டிப் பிடித்தனர். பைக்கில் தப்பிச் சென்ற கோகுல் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments