திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்.?

0 5457

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நூடுல்ஸ் சாப்பிட்ட  2 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தாளக்குடி ஊராட்சியைச் சேர்ந்த  சேகர் - மகாலெட்சுமி தம்பதியினரின் 2வயது மகன் சாய் தருண் கடந்த சனிக்கிழமை காலை நூடுல்ஸ் சாப்பிட்ட பின்னர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான்.

இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக உடற்கூறு சோதனையில் சிறுவனின் விலா எலும்பு உடைந்து இருப்பதாகவும் உடலில் பல இடங்களில் காயம் இருந்ததாகவும்  போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments