புதுச்சேரியில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு.!

0 2581

புதுச்சேரியில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

முத்தியால்பேட்டையைச் சேர்ந்த செல்வி என்பவரின் வீட்டின் முன் இன்று மாலை மின் கம்பி அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதையறியாத செல்வியின் மகன் கணேசன், அதனை மிதித்ததால் மின்சாரம் தாக்கியுள்ளது.

இதைக்கண்ட அவரது சித்தி கணேசனை மீட்க முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்த நிலையில், வீட்டில் இருந்தவர்கள் அவர்களை மீட்க முயன்றனர்.

அவர்களது சத்தத்தைக்கேட்ட அக்கம்பக்கத்தினர் மின்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், கணேசன் அவரது சித்தி உயிரிழந்த நிலையில், அவர்களை மீட்க முயன்ற இருவரும் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments