தூத்துக்குடியில் To இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தல்.. நடுக்கடலில் கடத்தல் படகை துரத்திச்சென்ற போலீசார்.!
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட பீடி மூட்டைகளை மாவட்ட கியூ பிரிவு போலீசார் கைப்பற்றினார்கள். போலீசாரை கண்டதும் கடத்தல்காரர்களின் படகு நடுகடலுக்குள் வேகமாக சென்றது.
இருப்பினும் போலீசார் விரட்டிச் சென்றதால் பீடி மூட்டைகளை கடலுக்குள் வீசி விட்டு அவர்கள் தப்பிச்சென்றனர். மொத்தம் 38 மூட்டைகளை கைப்பற்றிய போலீசார் அவற்றில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகள் இருந்ததாக தெரிவித்தனர்.
Comments