இமாச்சலப் பிரதேசத்தில் கேபிள் காரில் சிக்கிய 11 பேரும் பாதுகாப்பாக மீட்பு

0 2511

இமாச்சலப் பிரதேசத்தில் பர்வானூ என்னுமிடத்தில் தொழில்நுட்பக் கோளாறால் நடுவழியில் நின்ற கேபிள் காரில் சிக்கிக் கொண்ட 11 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

சோலன் மாவட்டத்தில் டிம்பர் டிரெயில் எனப்படும் சுற்றுலா விடுதிக்குச் சென்றுவர கேபிள் கார் போக்குவரத்து வசதி உள்ளது. 11 பேருடன் சென்ற கேபிள் கார் நடுவழியில் நின்றது.

தகவல் அறிந்த தொழில்நுட்பக் குழுவினரும், மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் இணைந்து கேபிள் காரில் இருந்த அனைவரையும் ஒவ்வொருவராகக் கயிறுகட்டிப் பாதுகாப்பாகத் தரையிறக்கினர். மாலைக்குள் மீட்புப் பணி முடிவடைந்ததாக மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments