பயணிகள் ரெயிலின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காற்று கசிவு.. துணிச்சலுடன் ரெயிலுக்கு அடியில் சென்று பழுதை நீக்கிய ஊழியர்.!

0 3208

பயணிகள் ரயிலின் அடிப்பகுதியில் ஏற்பட்டிருந்த பழுதை ரெயில்வே ஊழியர் ஒருவர்  தவழ்ந்தபடியே  சென்று சீர்செய்த காட்சிகளை ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ரெயில்வே பாலத்தின் மீது நின்றுக்கொண்டிருந்த அந்த ரெயிலில் ஒரு குறிப்பிட்ட பெட்டிக்கு கீழே காற்று கசிவு  ஏற்பட்டிருந்தது.தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்களில் ஒருவர், ரெயிலுக்கு அடியில் குறுகிய இடத்தில் தவழ்ந்தபடியே சென்று பழுதை சரிசெய்தார்.

இந்த செயலை பாராட்டி அந்த காட்சிகளை ரெயில்வே அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments