10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு எழுதியோரில் 90 விழுக்காட்டினர் தேர்ச்சி..

0 2950
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், தேர்வு எழுதியோரில் 90 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், தேர்வு எழுதியோரில் 90 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களில் 85 புள்ளி 8 விழுக்காட்டினரும், மாணவியரில் 94 புள்ளி 3 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிகப்பட்சமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் 97 புள்ளி 2 விழுக்காட்டினரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 97 புள்ளி ஒரு விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்ப் பாடத்தில் 94 புள்ளி 8 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் ஒருவர் மட்டும் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆங்கிலப் பாடத்தில் 45 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதத்தில் 2186 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அறிவியலில் 3841 பேர் நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். சமூக அறிவியலில் 1009 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments