தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா குழுமம் முடிவு

0 2856

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விற்பனை செய்வதாக வேதாந்தா குழுமம் சார்பில் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா குழுமம் வழக்குகளை நடத்தி வந்த நிலையில், ஆலையை விற்பனை செய்ய இன்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை 4ஆம் தேதி மாலை 6 மணிக்குள் ஆலையை வாங்குவதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே, மும்பை பங்குச்சந்தையில், வேதாந்தா குழுமத்தின் பங்கு விலை 9 சதவீதம் வரை சரிந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments