விமானத்தில் பறவை மோதி என்ஜின் செயலிழப்பு.. அவசரமாக தரையிரக்கப்பட்ட விமானம்..!

0 3491
விமானத்தில் பறவை மோதி என்ஜின் செயலிழப்பு.. அவசரமாக தரையிரக்கப்பட்ட விமானம்..!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பறவை மோதி என்ஜின் செயலிழந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தரையில் இருந்து ஆயிரத்து 600 அடி உயரத்தில் பறந்த இண்டிகோவின் ஏர்பஸ் ஏ320 நியோ விமானத்தில் திடீரென பறவை மோதியதாக கூறப்படுகிறது. என்ஜின் செயலிழந்ததை அடுத்து கவுகாத்தி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பயணிகள் வேறு விமானம் மூலம் டெல்லி அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், கோளாறு குறித்து ஆய்வு நடைபெறுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments