அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு

0 3259
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதனையொட்டி பல்வேறு மாநிலங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். லுதியானா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாபில் போலீசார் விழிப்புடன் இருக்கும்படியும், கண்காணிப்பு கேமரா டிஜிட்டல் வசதிகள் மூலமாக கலவரத்தில் ஈடுபடுவோரை அடையாளம் காணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments