அக்னிபாதை திட்டம் தொடர்பாக வதந்திகளை பரப்பியதாக 35 வாட்ஸ் அப் குழுக்கள் முடக்கம் - உள்துறை அமைச்சகம்

0 3249

க்னிபாதை திட்டம் தொடர்பாக வதந்திகளை பரப்பியதாக 35 வாட்ஸ் அப் குழுக்களை முடக்கிய உள்துறை அமைச்சகம், அத்திட்டம் தொடர்பான உண்மைத் தன்மையை மக்கள் அறிந்துகொள்ள தொலைபேசி எண்ணையும் அறிவித்துள்ளது.

அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்கள் தீவைப்பு போன்றவை நடைபெற்றது.

இந்நிலையில், அத்தகைய போராட்டங்களை தூண்ட வாட்ஸ் ஆப் செயலி பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதில் வதந்திகளை பரப்பிய குழுக்களை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வதந்தி பரப்பியதாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments