ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்ற இபிஎஸ் தயார் எனத் தகவல்

0 5848

ற்றைத் தலைமை குறித்து அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றவும், அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடினால் அதைச் சட்டப்படி சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்த பின் சென்னையில் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரைச் செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உட்பட அதிமுகவின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு வந்து அவருடன் ஆலோசனை நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments