பொதுக்குழுக் கூட்டத்தை ஒத்தி வைக்கக் கோரி நீதிமன்றத்தை நாட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முடிவு ?

0 3725

திமுக பொதுக்குழுக் கூட்டத்தை ஒத்தி வைக்கக் கோரி நீதிமன்றத்தை நாட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமைக் கோரிக்கை தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கு ஓ.பன்னீர்செல்வத்தை இணங்கச் செய்வதற்காகச் செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோர் பேச்சு நடத்தினர்.

அதில் உடன்பாடு ஏற்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. ஒற்றைத் தலைமைக்குப் பதிலாக 14 உறுப்பினர்கள் கொண்ட உயர்நிலைச் செயல் திட்டக் குழுவை உருவாக்கப் பன்னீர்செல்வம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments