ஒடிசாவில் தன் சொந்த திருமணத்திற்கு செல்ல மறந்த எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு.!

0 3968

ஒடிசாவில் தன் சொந்த திருமணத்திற்கு செல்ல மறந்த எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

Tirtol தொகுதி எம்.எல்.ஏ. பிஜெய் சங்கர் தாஸ், தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்கு அளித்ததாகவும், கடந்த வெள்ளிக்கிழமை பதிவு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் திருமணத்திற்கு அவர் வரவில்லை என்றும் செல்போன் அழைப்புகளை தவிர்த்ததாகவும், அவரது உறவினர்கள் தன்னை மிரட்டுவதாகவும் பெண் போலீசில் புகாரளித்தார்.

அதேநேரம் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொள்ள பதிவு செய்த நிலையில், திருமணத்திற்கு இன்னும் 60 நாட்கள் இருப்பதாக கருதியதாகவும், யாரும் தனக்கு நினைவூட்டாததால் திருமணத்திற்கு செல்ல மறந்ததாகவும் பிஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments