புதுச்சேரிக்கு மதுபான பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து.. மதுபானங்களை அள்ளி சென்ற பொதுமக்கள்.!

0 3488

திருப்பத்தூரில் புதுச்சேரிக்கு மதுபான பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீர் பாட்டில்களை ஏற்றி கொண்டு திருப்பத்தூர் வழியாக புதுச்சேரிக்கு அந்த லாரி சென்று கொண்டிருந்தது.

கலைஞர் நகர் பகுதியில் இருந்த சாக்கடை கால்வாய், மழை நீரால் சூழப்பட்டிருந்த நிலையில், அதனை கவனிக்காத ஓட்டுநர் அதன் வழியாக லாரியை இயக்கியதால், நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், லாரியில் இருந்து கீழே விழுந்த பாட்டில்கள் சிலவற்றை எடுத்துச் சென்றனர். பின்னர், மது பாட்டில்கள் விபத்துக்குள்ளான லாரியில் இருந்து வேறு ஒரு லாரிக்கு மாற்றி புதுச்சேரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments