நெல்லையில் பட்டா வழங்க லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.!

0 2909

நெல்லை மாவட்டம் பணகுடியில், பட்டா வழங்க லஞ்சம் பெற்றதாக வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

துரைகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள் தங்களது நிலத்திற்கு பட்டா கோரி, பணகுடி வருவாய் ஆய்வாளரான ஜான்சிராணி என்பவரை அணுகினர்.

அவர்களிடம் ஜான்சிராணி தலா 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. முன்பணமாக அந்த பெண்கள் ஜான்சி ராணியிடம் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கியதை அங்கிருந்த ஒரு பெண் விடியோ எடுத்து வெளியிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, வருவாய் ஆய்வாளர் ஜான்சிராணியை பணியிடை நீக்கம் செய்து நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments