காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2214

காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம் என்றும் காவிரி உரிமையைக் காக்க தமிழ்நாடு அரசு போராடும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் காவிரி உரிமையைத் தடுப்பதும், நீர்வரத்தை குறைப்பதும் விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என்றும் அது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மேகதாது அணை தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பது தவறானது என்றும் தமிழக அரசின் சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments