தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

0 2630

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

மேலும் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த ஒரு வாரத்திற்கு மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments