கர்நாடகத்தில், கற்கள், கோடாரியால் தாக்கி கழுதைப்புலியை கொன்ற கிராம மக்கள்

0 2941

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில், கழுதைப்புலி மீது கற்களை வீசி கொடூரமாக கொலை செய்தது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள முதுகள் கிராமத்தில் பாறைகளுக்கு கீழ் பதுங்கி இருந்த கழுதைப்புலியை கிராம மக்கள் கற்களை வீசியும், கோடாரி, சுத்தியல் போன்ற கருவிகளால் தாக்கியும் கொன்றனர்.

அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், அது குறித்து விசாரித்த வனத்துறையினர் கிராம மக்கள் 5 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments