போலீசில் காட்டி கொடுத்ததால் வியாபாரியை தாக்கி பெட்ரோல் குண்டை வீசிய இளைஞர்கள் இருவர் கைது.!

0 3525

சென்னை மணலியில் போலீசில் காட்டி கொடுத்தாக கூறி மளிகை கடை வியாபாரி மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மணலி சர்.சி.வி ராமன் தெருவில் வசிக்கும் மளிகைக் கடை வியாபாரியான மாரியப்பனை, கடந்த 12ஆம் தேதி கஞ்சா போதையில் 5 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதோடு அவரது கடை மீது பெட்ரோல் குண்டை வீசி சென்றனர். ஆனால் பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த மாரியப்பன் அளித்த புகாரில் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த குள்ளமணி என்ற நபரை மாரியப்பனின் கடைக்கு முன் வைத்து போலீசார் அழைத்து சென்ற நிலையில் மாரியப்பன் தான் காட்டிக்கொடுத்ததாக நினைத்து தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments