அடுத்தடுத்து 7 நிலநடுக்கம் : துபாய் உள்ளிட்ட பெர்சிய வளைகுடா பகுதிகள் குலுங்கின

0 3700

ஈரானின் தெற்கே அமைந்துள்ள கிஷ் தீவில் அடுத்தடுத்து 7 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் ஐக்கிய அமீரகத்தின் துபாய் உள்ளிட்ட பெர்சிய வளைகுடா பகுதிகள் குலுங்கின.

ஹார்மோஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள தீவில் 6 ரிக்டர் என்ற அளவில் 4 அதிர்வுகளும், 5.3 ரிக்டர் புள்ளியில் ஒரு அதிர்வும் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கத்தாரிலும் ரிக்டர் அளவுகோளில் 5.3 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நில நடுக்கத்தின் அதிர்வுகள் நாடு முழுவதும் உணரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments