ராகுலுக்கு ஆதரவாக போராட்டம் - பெண் மீது போலீஸ் தாக்குதல்

0 2604

டெல்லியில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதில் பங்கேற்ற பெண் ஒருவர் டெல்லி காவல்துறையால் தாக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

அப்பெண் போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்படும் வீடியோவை கேரளாவைச் சேர்ந்த மகிளா காங்கிரசார் ட்வீட் செய்துள்ளனர்.

ராகுல் காந்திக்கு ஆதரவாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை டெல்லி போலீசார் கலைக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

கிடையே கோவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியும் இந்த வழக்கில் விசாரணைக்காக ஜூன் 23ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments