ஏர் ஏசியா விமான நிறுவனத்தை ஏர் இந்தியா கையகப்படுத்த இந்திய போட்டி ஆணையம் அனுமதி..!

0 2024

ஏர் ஏசியா விமான நிறுவனத்தை கையகப்படுத்த டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஆணையமான சி.சி.ஐ. ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ஏர் ஏசியா நிறுவனத்தின் 83 புள்ளி 67 சதவீத பங்குகளை டாடா குழுமம் வைத்துள்ளது.

பெருவாரியான பங்குகளை வைத்துள்ளதால் மீதமுள்ள பங்குகளையும் விலைக்கு வாங்கி ஏர் ஏசியா நிறுவனத்தை ஏர் இந்தியாவுடன் இணைக்க உள்ளதாக டாடா குழுமம் தெரிவித்தது. டாடா குழுமத்தின் விண்ணப்பத்திற்கு இந்திய போட்டி ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments