குரங்கு அம்மை நோய் பரவலை பொதுசுகாதார அவசரநிலையாக அறிவிக்க முக்கிய ஆலோசனை..!

0 1895

உலகம் முழுவதும் 39 நாடுகளில் ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நோய் தொற்று பரவல் தொடர்பாக அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில், கொரோனா போன்று பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், குரங்கு அம்மை நோய் பரவல் அசாதாரணமானதாகவும் கவலைக்குரியதாகவும் உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments