தாதா லாரன்ஸ் பிஷ்னோயை, பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க அனுமதி தரவேண்டும் - பஞ்சாப் போலீசார்

0 2641
தாதா லாரன்ஸ் பிஷ்னோயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய டெல்லி போலீசார்

பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தாதா லாரன்ஸ் பிஷ்னோயை, பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க அனுமதி தரவேண்டுமென பஞ்சாப் போலீசார், நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

லாரன்ஸ் பிஷ்னோயை, டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், பஞ்சாப் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், லாரன்ஸ் பிஷ்னோயின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், காணொளி காட்சி வாயிலாகவோ அல்லது டெல்லியில் வைத்தோ பிஷ்னோயிடம் பஞ்சாப் போலீசார் விசாரணை மேற்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments