"டாஸ்மாக்" வாசலில் குடிமகன்கள் அட்டூழியம் : ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்

0 2893

குமரி மாவட்டம் அருமனை அருகே மதுக்கடையின் வாசலில் குடிபோதையில் தகாறில் ஈடுபட்ட நபர்கள், அருகே நின்றவர்களையும் தாக்கியது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருமனை சந்திப்பு பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றிற்கு குடிபோதையில் வந்த 3 பேர் அங்கு நின்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இதனை அடுத்து, மதுக் கடைக்குள் புகுந்து பணியாளர்களுக்கும் அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments