காரின் மீது மோதியதால் ஆத்திரம்.. இருசக்கர வாகன ஓட்டியை சரமாரியாக தாக்கிய கார் உரிமையாளர்!

0 2665

சென்னையை அடுத்த தாம்பரம் பேருந்து நிலையம் அருகே, காரின் மீது மோதிய இருசக்கர வாகன ஓட்டியை, கார் உரிமையாளர் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

நேற்றிரவு ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலின் போது, முன்னே சென்ற கார் மீது இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரின் பின்பக்கத்தில் லேசான கீறல்கள் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கார் உரிமையாளர், இருசக்கர வாகன ஓட்டி கீழே விழுந்ததையும் பொருட்படுத்தாமல் அவரை சரமாரியாக தாக்கினார்.

அந்த நபர் மன்னிப்புக் கேட்டும் கார் உரிமையாளர் விரட்டிச் சென்று தொடர்ந்து தாக்கியதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments