போட்டிப் போட்டுக் கொண்டு இளைஞர்கள் பைக் ரேஸ்... பைக் மோதியதில் 50 வயது பெண் சம்பவ இடத்திலேயே பலி.!
சென்னையை அடுத்த வண்டலூர் வெளிவட்டசாலையில், போட்டி போட்டுக் கொண்டு ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களின் பைக் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளரான செல்வகுமாரி என்பவர் தாம்பரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பின்னால் 3 பைக்குகளில் அதிவேகமாக வந்த இளைஞர்கள் ரேஸில் ஈடுபட்ட நிலையில், நவீன் என்பவர் ஓட்டிச் சென்ற பைக் செல்வகுமாரியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் தடுப்பு சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டதில், தலையில் பலத்த காயமடைந்த செல்வகுமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் நவீனுக்கு பின்னால் அமர்ந்து சென்ற விஷ்வா என்ற இளைஞருக்கு கால்கள் முறிந்தன. ரேஸில் ஈடுபட்ட ஒரு பைக்கை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments