தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளர் கைது

0 3030

சென்னை அயப்பாக்கம் தொழிலதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட வழக்கில், கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு  ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தாரை கடத்தி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து,  சொத்துக்களை அபகரித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், 3 காவலர்கள், ஆந்திர தொழிலதிபர்கள் உள்ளிட்ட 10 பேர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணனை,  மதுரவாயலில் உள்ள அவரது நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்த போது, சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments