பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் விளம்பரங்களுக்குத் தடை.. விதிமீறல்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம் - மத்திய அரசு அறிவிப்பு

0 2373
பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் விளம்பரங்களுக்குத் தடை.. விதிமீறல்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம் - மத்திய அரசு அறிவிப்பு

தவறாக திசை திருப்பும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சில புதிய வழிகாட்டல்களை அறிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமையை ஆதரிக்கும் விளம்பரங்கள், நுகர்வோருக்கு பொய்யான நம்பிக்கைகள், வாக்குறுதிகள் அளித்து திசை திருப்பும் விளம்பரங்கள் மீது தடை விதிக்கப்படும். குழந்தைகளை குறிவைக்கும் விளம்பரங்களையும் வரையறை செய்ய சட்டம் பயன்படுத்தப்படும்.

சுகாதார எச்சரிக்கை தேவைப்படும் அல்லது குழந்தைகளால் வாங்க முடியாத தயாரிப்புகள் இடம்பெறக் கூடாது. விதிமீறல்களுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் கவர்ச்சிகரமான விளம்பரங்களால் ஏமாற்றப்படுவதைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments