ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 4 வயது சிறுமியின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற தந்தை..!

0 3062
ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 4 வயது சிறுமியின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற தந்தை..!

மத்திய பிரதேசத்தில், ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மகளின் சடலத்தை அவரது தந்தை தோளில் சுமந்து செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

சாட்டர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலத்தை வீட்டுக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால்,சிறுமியின் தந்தை, தனது வீடு வரை தோளிலேயே சுமந்து சென்றார்.

இந்த காட்சி இணையத்தில் வைரல் ஆனதை அடுத்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments