காதலிக்க மறுத்த மாணவி கல்லால் தாக்கிக் கொலை.. சோளக்காட்டில் பதுங்கியிருந்த இளைஞர் கைது..!

0 4810

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு, சோளக்காட்டில் பதுங்கியிருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவியை ஒரு தலையாக காதலித்த சாமிதுரை என்பவன், கடந்த இரு தினங்களுக்கு முன் மாணவியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து அவரது வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்தியுள்ளான். அதனை ஏற்க மறுத்த மாணவி கத்திக் கூச்சலிட்டதால், கல்லால் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடினான்.

4 தனிப்படை அமைத்து சாமிதுரையை போலீசார் தேடி வந்த நிலையில், கூடமலை அருகே சோளக்காட்டில் பதுங்கியிருந்த சாமிதுரையை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments