காங்கோவில் வைரச்சுரங்கத்தில் கற்கள் சரிந்து விழுந்த விபத்து - 40 பேர் பலி

0 3599

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வைரச்சுரங்கம் சரிந்த விழுந்த விபத்தில் சிக்கி, 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

கின்ஷசா நகரில் செயல்பட்டு வரும் வைரச்சுரங்கத்தில், தொழிலாளர்கள் வைரத்தை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments