44வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான இலட்சினை மற்றும் சின்னத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2563
44வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான இலட்சினை மற்றும் சின்னத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

44வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான இலட்சினை மற்றும் சின்னத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி முதல் நடைபெற உள்ள செஸ் தொடரில், 186 நாடுகளைச் சார்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வண்ண விளக்குகளால் ஓளிரூட்டப்பட்ட இலச்சினை மற்றும் “தம்பி” என்கிற வேட்டி சட்டை அணிந்த குதிரை சின்னத்தினை முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

அதேபோல், போட்டிக்கான 50 நாள் கவுண்ட் டவுன், மக்களின் பார்வைக்காக ஒளிப்படக் காட்சியாக தொடங்கி வைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments