புதிய காவல் மாவட்டமாக உதயமானது கொளத்தூர்..!
சென்னை பெருநகர காவல்துறையில் புதிய காவல் மாவட்டமாக கொளத்தூர் உருவாக்கப்பட்டு, கூடுதல் கண்காணிப்பாளராக உள்ள ராஜாராம் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருடன் சேர்த்து தமிழகத்தில் 25 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு உதவி கண்காணிப்பாளர் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
பி.எஸ்.பிரியா மதுரை 6-வது பட்டாலியன் கண்காணிப்பாளராகவும், வனிதா மதுரை மாநகர காவல் ஆணைய தலைமையகத்தில் துணை ஆணையராகவும், ஜோசப் தங்கையா பள்ளிக்கரணை துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments