நேஷனல் ஹெரால்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக 3 வார காலம் அவகாசம் கோரிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.!
கொரோனா தொற்றில் இருந்து குணமடையாததை அடுத்து அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக 3 வார கால அவகாசம் வழங்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா கேட்டுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராக இருந்த நிலையில் கொரோனா காரணமாக அவகாசம் கோரினார்.
மறு பரிசோதனை செய்ததில் அவர் பூரண குணம் அடையவில்லை என்றும் தொடர்ந்து ஒய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்தி 3 வார காலம் அவகாசம் கோரியுள்ளார்.
Comments