ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி அபிலாஷா சொந்த ஊர் வந்தார்.. வெள்ளி விமானம் பரிசளித்து பார்வையாளர்கள் கரவொலி..!

0 3165
ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி அபிலாஷா சொந்த ஊர் வந்தார்.. வெள்ளி விமானம் பரிசளித்து பார்வையாளர்கள் கரவொலி..!

சொந்த ஊரான ரோஹடக்கிற்கு திரும்பி வந்த பெண் போர் விமானியான அபிலாஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஊர்மக்கள் அவருக்கு வெள்ளியால் செய்த விமானத்தைப் பரிசாக வழங்கினர். அபிலாஷாவுக்கு பெற்றோர் முன்னிலையில் ஊர்மக்கள் பலத்த கரவொலிகளுடன் வரவேற்பு அளித்தனர்.

ஹரியானாவைச் சேர்ந்த 26 வயதான அபிலாஷா பராக் இந்திய இராணுவத்தின் முதல் பெண் போர் விமானியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.

சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அபிலாஷா இந்திய ராணுவத்தின் முதல் பெண் போர் விமானியாக பொறுப்பேற்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments