நடிகை ஆயிஷா சுல்தானா மீதான தேசதுரோக வழக்குகளின் விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

0 3316
நடிகை ஆயிஷா சுல்தானா மீதான தேசதுரோக வழக்குகளின் விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

லட்சத்தீவைச் சேர்ந்த நடிகையும் மாடலும் ஆன ஆயிஷா சுல்தானா மீதான தேசதுரோக வழக்கின் விசாரணைக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தேசதுரோக வழக்குகளின் தன்மை குறித்து பரிசீலித்து முடிவை அறிவிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்ததன் அடிப்படையில், ஆயிஷா மீதான வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கவரட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்டு விசாரணை ஏதும் நடைபெறாது.

மலையாள தொலைக்காட்சி விவாதத்தில், கோவிட் பரவல் குறித்து மத்திய அரசு மீது குற்றம் சாட்டிய ஆயிஷாமீது பாஜக புகாரின் பேரில் தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments