ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு.. 4 பள்ளி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது..!

0 5926
ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு.. 4 பள்ளி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது..!

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் கொலை வழக்கில்  4 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனூரைச் சேர்ந்த ஜோதி முத்து என்பவர் 2 நாட்களுக்கு முன்பு ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பினார்.

வைகையாற்று பகுதியில் சென்ற அவரை வழிமறித்த மர்ம கும்பல் கத்தியால் குத்திவிட்டு 300 ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு ஓடி விட்டது.

இதுதொடர்பாக 5பேரை கைது செய்த போலீசார் விசாரித்ததில், இரவு நேரங்களில் தனியாக வரும் நபர்களை வழிமறித்து கஞ்சா, மதுபானம் வாங்க கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்து செல்வது தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments