நள்ளிரவில் கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை.. ஏணி மூலமாக மீட்டு காட்டுக்குள் விடுவித்த தீயணைப்புத் துறையினர்..!

0 2512
நள்ளிரவில் கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை.. ஏணி மூலமாக மீட்டு காட்டுக்குள் விடுவித்த தீயணைப்புத் துறையினர்..!

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டம் ஹின்டோல் அருகில் உள்ள ஆழமான கிணற்றில் விழுந்து விட்ட சிறுத்தையை தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஏணி மூலமாக மீட்டனர்.

சிறுத்தையின் உறுமல் கேட்டு கிணற்றில் விழுந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்ததும் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் மீட்பு முயற்சிகளை மேற்கொண்டனர்.

முதலில் ஒரு பலகையைக் கயிறு கட்டி கிணற்றில் போட்டனர். அது நீரில் மிதந்தது. சிறுத்தை அதன் மீது ஏறிக் கொண்டது. பின்னர் ஒரு மரத்தால் ஆன ஏணி கிணற்றில் விடப்பட்டது. சிறுத்தை அதில் பாய்ந்து ஏறி மேலே வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments