வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞருடன் காதல் : பெற்ற மகளை கழுத்தை நெறித்துக் கொலை செய்த தந்தையின் வெறிச்செயல்

0 2969

ர்நாடக மாநிலம் மைசூர் அருகே, வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்த ஆத்திரத்தில், பெற்ற மகளை கழுத்தை நெறித்துக் கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்தார்.

சுரேஷ் - பேபி தம்பதியின் 17 வயதான மகள், இளைஞர் ஒருவரை காதலித்ததற்கு, பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெற்றோர் மீது மாணவி கொடுத்த புகாரை விசாரித்த போலீசார், பெற்றோருடன் செல்ல மாணவி விருப்பம் தெரிவிக்காததால் அவரை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் காப்பகத்தில் இருந்து மாணவியை வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர், அந்த இளைஞருடன் பேச வேண்டாமென கண்டித்துள்ளனர்.

மாணவி ஏற்காததால் ஆத்திரமடைந்த தந்தை சுரேஷ் மாணவியை கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு, மனைவி துணையுடன் சடலத்தை அந்த இளைஞரின் கிராமத்தில் வீசியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments