தமிழ்நாட்டில் கடைகள், வணிக நிறுவனங்களை 24 மணி நேரம் திறக்க அனுமதி

0 4651
தமிழ்நாட்டில் கடைகள், வணிக நிறுவனங்களை 24 மணி நேரம் திறக்க அனுமதி

தமிழ்நாட்டில் 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் கடைகள், வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜூன் 5 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவு அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு பணியாளருக்கும், சுழற்சி முறையில், வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments