ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக ஐபிஎம் அறிவிப்பு

0 2875

மெரிக்காவைச் சேர்ந்த கணினி நிறுவனம் ஐபிஎம் ரஷ்யாவில் தனது தொழிலைவிட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யாவில் மார்ச் முதல் தனது செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்தது.

அதேநேரத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வந்தது. இந்நிலையில் ஐபிஎம் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா விடுத்துள்ள செய்தியில், ரஷ்யாவில் தங்கள் செயல்பாட்டை முடித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

போரால் நிலையற்ற சூழல் நீடிப்பதால் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments