சிகரெட் வாங்க ரூ.10 தர மறுத்த சிறுவனுக்கு கத்தி குத்து : பள்ளி அருகே பதறவைக்கும் சம்பவம்

0 2687

புதுடெல்லியில், சிகரெட் வாங்க 10 ரூபாய் தர மறுத்த சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே வயிற்று பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர்.

சிசிடிவி காட்சிகள் உதவியுடன் இதில் தொடர்புடைய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது, சிகரெட் வாங்க 10 ரூபாய் தராததால் சிறுவனை குத்தி கொன்றதாக ஒப்புக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments