பாடம் எடுக்காமல் வகுப்பறையில் தூங்கிய அரசுப் பள்ளி ஆசிரியை : விசிறி விடும் மாணவி

0 3114

பீகாரில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் உறங்கி கொண்டிருக்க, அவருக்கு மாணவி கைவிசிறி கொண்டு விசிறி விடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

மேற்கு சம்பரான் மாவட்டத்தின் பகாஹி புரைனா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை, வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருக்கும் போதே நாற்காலியில் அமர்ந்து உறங்கியதை அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து வெளியிட்டார்.

அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பலர் வலியுறுத்திய நிலையில், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் நாற்காலியில் தான் ஓய்வெடுத்ததாக ஆசிரியை விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments