காதலிக்க மறுத்த மாணவியின் தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாக கொலை செய்த இளைஞர்

0 3275

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொடூரமாக கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

கூடமலையைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவியை, சாமிதுரை என்பவன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். மாணவி கல்லூரிக்கு செல்லும் போது தன்னை காதலிக்குமாறு கூறி வற்புறுத்திய நிலையில், இதையறிந்த பெண்ணின் உறவினர்கள் சாமிதுரையை எச்சரித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை நேற்றிரவு மாணவியின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு சென்று தோட்டத்தில் பதுங்கியிருந்துள்ளான்.

மாணவி வெளியே வந்ததும் தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு கூறி அவன் வற்புறுத்தியதாகவும் மாணவி கூச்சலிட்டதால் கீழே தள்ளி தலையில் கல்லைத் தூக்கி தலையில் போட்டும் காலால் மிதித்தும் கொடூரமாக தாக்கிவிட்டு, தடுக்க வந்த உறவினர்களையும் தாக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments